அன்னையின் நினைவுசுமந்த ஊர்திப்பவனி 2023

அன்னை பூபதியின் நினைவுதினம் 
யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி ஊர்திப்பவனி

அன்னை பூபதியின் 35வது நினைவுதினத்தை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி ஊர்திப்பவனி ஆரம்பமானது.

அன்னை பூபதியின் உருவப்படம் தாங்கிய ஊர்திப்பவனி நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் நினைவிட முன்றலில் இருந்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மதியம் ஆரம்பமாகியது.

நல்லூரில் அடையாள உண்ணாநோன்பில் ஈடுபட்டவர்களும் அன்னை பூபதிக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்த ஊர்தியானது தமிழர் தாயகத்தை வலம்வந்து மட்டக்களப்பிலிருக்கும் அன்னை பூபதி நினைவிடத்தை சென்றடையும்..

Leave A Comment