ஆவணம்

மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை 06.01.2010

மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை

அவர்களின் வீர வணக்க நாள் இன்றாகும

06.01.2010

.

அனுராதபுரத்தில் வேலுப்பிள்ளை பணியாற்றிய காலத்தில் இவர்கள் வீட்டிற்கு அருகில்தான் எல்லாளனின் சமாதி இருந்தது. அந்த சமாதியில் தினசரி விளக்கேற்றி பார்வதி அம்மையார் வழிபடுவது வழக்கம். 


அப்போதுதான் பிரபாகரன் அவர் வயிற்றில் கருவாக உதித்தார் என வேலுப்பிள்ளை பிற்காலத்தில் கூறியிருக்கிறார்.


பிரபாகரனின் புரட்சிகர நடவடிக் கைகளை அவரது தந்தை விரும்ப வில்லை என்பது போன்ற பொய்யான கட்டுக்கதைகளை சிலர் திட்டமிட்டுப் பரப்ப முயன்று வருகின்றனர். 


உண்மை அது அல்ல. பிரபாகரனின் தந்தை இயற்கையிலேயே பற்றற்ற உள்ளம் படைத்தவர். தனது பிள்ளைகள் அவரவர்களின் எதிர்காலத்தை அவர்கள் விருப்பப்படிதான் அமைத்துக்கொள்ள வேண்டும். 


பிள்ளைகளை பெற்று வளர்த்துப் படிக்க வைத்து ஆளாக்கு வதோடு பெற்றோரின் கடமை முடிந்து விடுகிறது என்று நினைக்கக்கூடியவர். எனவே பிரபாகரனை அவரின் போக்கி லேயே விட்டுவிடுவது என்றுதான் அவர் முடிவுசெய்தார்.


மிக இளவயதில் அதாவது 17ஆம் வயதில் பிரபாகரன் தனது படிப்பை நிறுத்திவிட்டு விடுதலைப் போராட்டத் திற்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண் டதை அவர் தவறாக நினைக்கவில்லை. 


ஆனால் படிப்பை முடித்துவிட்டுச் சென்றிருக்கலாமே என்றுதான் கருதினார். பிரபாகரனின் புரட்சிகர நடவடிக்கை களின் விளைவாக அமைதி நிலவிய அவர் குடும்பத்தில் புயல் வீசத் தொடங் கிற்று. 


காவல் துறையின் தொந்தரவுகள் அதிகமானபோதிலும் எல்லாவற்றையும் அந்தக் குடும்பம் பொறுமையுடன் ஏற்றுக்கொண்டது.


பதவியிலிருந்து ஓய்வுபெற்று 80களின் நடுவில் அவர் தமிழகத்திற்கு வந்து தங்கியபோது அவருடன் நெருங் கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத் தது. அவர் தன் மனைவியுடன் திருச்சி யில் குடியிருந்தார். 


திருச்சி செல்லும்போ தெல்லாம் அவர்களைச் சந்திப்பது எனது வழக்கம். அப்போது பிரபாகரன் சென்னையில்தான் இருந்தார். ஆனா லும் மகனுடன் தங்கவேண்டும் என்று அவரோ அல்லது பெற்றோரைத் தன்னுடன் வைத்துக்கொள்ளவேண்டும் என்று பிரபாகரனோ நினைக்கவில்லை. 


அவர்கள் அவ்வப்போது சந்திப்பார்கள்; அவ்வளவுதான்.


”ஒருமுறை சென்னையில் பிரபாகரனை நான் சந்தித்தபோது ‘அண்ணா ஒரு உதவி செய்யவேண்டும்” என்று கூறினார். வழக்கத்திற்கு மாறான அந்த பீடிகையைக் கண்டு திகைத்தேன்.


”என்ன செய்யவேண்டும் என்ப தை சொல்லுங்கள் செய்கிறேன். எதற்காக இந்தப் பீடிகையெல்லாம் போடுகிறீர்கள்” என்று நான் கூறினேன்.


அவர் புன்னகையுடன் ‘தமிழீ ழத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்க ளின் வரைபடங்கள் உள்ளன. அவற்றை திருத்தி இன்றிருக்கும் நிலையில் ஆக்கித் தரவேண்டும்’ என்று கூறினார்.


வரைபடத்தை திருத்துவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்பது புரியாமல் நான் திகைத்தபோது அவர் தொடர்ந்தார்.


”இதை முற்றிலுமாக சரியாகச் செய்யக்கூடியவர் ஒருவர் இருக்கிறார்/ அவரிடம் நீங்கள்தான் பேசி அதைச் செய்யவைக்கவேண்டும்” என பிரபாகரன் கூறியபோது அருகிலிருந்த பேபி சுப்பிரமணியமும் மற்றவர்களும் சிரித்தனர். 


எனது திகைப்பு மேலும் அதிகமாயிற்று.

பேபி குறுக்கிட்டு ‘அண்ணா’ தலைவரின் தந்தைதான் இதை சரியாகச் செய்யக்கூடியவர். அவரிடம் நீங்கள் பேசி இதை எப்படியாவது முடிக்கவேண்டும்’ என்று கூறினார்.


தனது தந்தையிடமிருந்து இந்த உதவியைப் பெற பிரபாகரன் தயங்கு வதைப் பார்த்து நான் மனதிற்குள் நகைத்துக்கொண்டேன். பிறகு திருச்சியில் உள்ள அய்யா வேலுப்பிள்ளையுடன் தொடர்புகொண்டபோது பளிச்சென்று ‘மகன் கூறினாரா?’ என்று கேட்டார். 


ஆம் என்று நான் சொன்னபோது அடுத்த வாரம் சென்னை வருவேன் வந்து செய்து தருகிறேன் என்று சொன்னார். அதைப் போல சென்னை வந்து ஒரு வாரம் எனது வீட்டிலேயே தங்கியிருந்து அந்த வரை படங்களை எல்லாம் திருத்திக்கொடுத்தார்.


1988ஆம் ஆண்டு பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்று நூலை நான் எழுதியபோது அய்யா வேலுப்பிள்ளை அதை முழுவதுமாகப் படித்துத் திருத் தங்கள் செய்து தந்தார். 


பிரபாகரனின் வாழ்க்கையைப் பற்றி எழுதப்பட்ட முதல் நூல் அதுவாகும். பிற்காலத்தில் அதிருந்து தான் பலர் குறிப்புகளை எடுத்து பிரபாகர னைப் பற்றிய நூல்களை எழுதினார்கள்.


1989ஆம் ஆண்டில் சூலை மாதம் 23ஆம் தேதி திருச்சியில் அய்யா வேலுப்பிள்ளை தம்பதியரைச் சந்தித்தேன். சந்தித்துவிட்டு நான் திரும்பியபோது பிரபாகரன் கொல்லப்பட்டதாக ஒரு பர பரப்புச் செய்தி வெளியானது. உடனடியாக புலிகளின் தலைமை அலுவலகத்திற்குத் தொடர்புகொண்டு அச்செய்தியில் உண்மையில்லை என்பதை அறிந்தேன். 


அய்யா வேலுப்பிள்ளையும் அம்மாவும் இச்செய்திகேட்டு மனங்கலங்கி விடக்கூடாது என்பதற்காக திரும்பவும் அவசரஅவசரமாக அவர்களின் வீட்டுக்குச் சென்றேன். ஆனால் வழக்கம் போல அவர்கள் எவ்விதப் பரபரப்பும் இல்லாமல் இருந்தார்கள். 


பொய்ச் செய்தியை நம்பவேண்டாம் என்று நான் கூறியபோது அய்யா வேலுப்பிள்ளை சிரித்தார். மனைவியைக் காட்டி ”இவர் தான் கொஞ்சம் கலங்கிப்போனார். 


ஆனால் நான் அவருக்கு தைரியம் கூறி னேன்” என்று சொன்னார். அந்தளவுக்கு தனது மகன் மீது அவருக்கு அளவு கடந்த நம்பிக்கையிருந்தது.


அதற்குப் பிறகு பலமுறை இரு வரும் மதுரையில் உள்ள எங்கள் வீட்டிற்கும், பாபனாசத்தில் உள்ள எங்கள் வீட்டிற்கும் பலமுறை வந்து தங்கியிருக் கிறார்கள். எங்கள் குடும்பத்திலேயே அவர்களும் அங்கமாகிவிட்டார்கள் என்று சொல்லவேண்டும். 


அந்த அளவுக்கு எங்கள் குடும்பத்தில் நடைபெற்ற சுகதுக்க நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் அவர்கள் உரிமையோடு கலந்து கொண்டார்கள். சில வேளைகளில் மகன் மனோகரன் மகள் வினோதினி ஆகியோரின் குடும்பங்களை யும் அழைத்து வந்திருக்கிறார்கள். அந்த நாட்கள் இனியவை; என்றும் மறக்க முடியாது.


1990ஆம் ஆண்டு பிப்ரவரியில் பிரபாகரனின் அழைப்பை ஏற்று தமிழீழம் சென்றேன். விரிவான சுற்றுப் பயணம் செய்துவிட்டு மார்ச் மாதம் நடு வில் தமிழகம் திரும்பினேன். உடனடி யாகத் திருச்சியில் தம்பியின் பெற்றோ ரைச் சந்தித்து தம்பி கூறிய செய்தி களைத் தெரிவித்தேன். 


இந்திய அமைதிப்படை வெளியேற்றப்பட்டு தமிழீழப் பகுதி முழுவதிலும் புலிகளின் ஆட்சி நடப்பதையும் அங்குள்ள மற்ற நிலைமைகளையும் அவர்களுக்கு எடுத் துக்கூறினேன். 


அவர்களின் பேரக் குழந்தைகளான சார்லஸ், துவாரகா ஆகியோரின் படங்களை எடுத்துக் கொடுத்த போது வயது முதிர்ந்த அந்த இருவரும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. 


முதன் முதலாக தங்கள் பேரக் குழந்தைகளின் படங்களை பார்த்த போது அவர்களின் விழிகளில் நீர்துளிர்த்தது. ஆனால் காலத்தின் கோலம் பேரன் சார்லஸ் போரில் கரும்புலியாகச் சென்று போரிட்டு சாவை அணைத்துக்கொண்ட போது அந்த இருவரின் மனமும் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.


2000ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பார்வதி அம்மையாரை பக்கவாதம் தாக்கிற்று. அதன் விளைவாக அவர் கை, கால்கள் செயலற்றுப்போயின. அந் தச் சூழ்நிலையில் அவர்களை ஒதுக்குப் புறமான ஒரு இடத்தில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தது. 


முசிறியில் உள்ள டாக்டர் இராசேந்திரன் தாமாகவே முன்வந்து அவரது வீட்டில் வைத்து மருத்துவமும் பார்த்து அவர்களை நன்கு பராமரித்தார். அம்மையாரின் உடல் கொஞ்சம் கொஞ்சமாக தேறியது.


சில வாரங்களுக்கு ஒருமுறை முசிறி சென்று அவர்களைப் பார்த்து நலம் விசாரித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். பிறகு அவர்கள் தாயகம் திரும்பிச் செல்வதென முடி வெடுத்தபோது நான் வெளியில் இல்லை. 


பொடாக் கைதியாக சிறையில் இருந்தேன். அதற்குப் பின்னர் அவர் களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவேயில்லை.


2005ஆம் ஆண்டில் வழக்கறிஞர் சந்திரசேகரன் தமிழீழம் சென்று பிரபாகரன் அவர்களையும் அவரின் பெற்றோரையும் சந்தித்துப்பேசிவிட்டு திரும்பினார். அவர்கள் நலமாக இருப்பதாக அவர் கூறிய செய்தி எனக்கு நிம்மதியை அளித்தது.


பின்னர் அந்த போர்ச்சூழலில் அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியாமல் கவலையடைந்தேன். தனது பெற்றோரைப் போன்ற ஏராளமான வய தானவர்கள் போர்ச் சூழலில் சொல் லொண்ணாத துன்பங்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும்போது தனது பெற் றோரை மட்டும் பாதுகாப்பாக வெளி நாட்டுக்கு அனுப்பிவைக்க பிரபாகரன் விரும்பவில்லை. 


அவர்களும் அவ்வாறு பத்திரமாக வெளியேற விரும்பவில்லை. தங்களுடைய புதல்வன் தலைமையில் நடைபெறும் விடுதலைப் போராட்டத் தின் போது அருகேயே இருப்பதுதான் தாங்கள் செய்யும் உதவி என அவர்கள் உறுதியோடு இருந்தார்கள்.


கடந்த எட்டு மாதங்களாக சிங்கள வதை முகாமில் அவதிப்பட்ட இலட்சக் கணக்கான தமிழ் மக்களைப் போல இவர்களும் அவதிகளுக் குள்ளானார்கள். தாங்க முடியாத கொடுமைகளையெல் லாம் தாங்கிக்கொண்டார்கள். 


தங்கள் தலைவனின் பெற்றோர்கள் படும் துயரை பார்த்த மக்கள் மனம் கலங்கினார்கள். ஆனாலும் அவர்கள் இருவரும் தங்க ளுடனேயே இருந்து அந்த துயரங் களை பகிர்ந்து கொண்டதைப் பார்த்து அந்த மக்கள் நெக்குருகினார்கள்.


திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் மாவீரனின் தந்தை மட்டு மல்ல எக்காரணத்தைக் கொண்டும் சிங்கள அரசிடம் மன்றாடி முறையிட்டு விடுதலை பெறவேண்டும் என்று ஒரு போதும் எண்ணாத திண்ணிய நெஞ்சுரம் கொண்ட அவரும் ஒரு மாவீரரே!. 


இறுதிவரை துன்பச் சூழலிலேயே வாழ்ந்து வீர மரணத்தைத் தழுவிக்கொண்டார். அவரது மரணம் தமிழர்கள் ஒவ்வொரு வரின் உள்ளங்களிலும் சோகமுத்தி ரையை பதித்தாலும் அதனுடன் வெஞ்சின மும் பதியவேண்டும். 


அவரின் சாவுக்குக் காரணமான இராசபக்சேயின் கும்பலுக்குத் தகுந்த தண்டனை அளித்தே தீரவேண் டும் என்ற சூளுரையை ஒவ்வொரு தமிழனும் மேற்கொள்ள வேண்டும். திரு வேங்கடம் வேலுப்பிள்ளையின் மீது உல கத் தமிழர்கள் சபதம் செய்வோம். 


சிங்கள வெறியர்களின் பிடியில் சிக்கியுள்ள சகோதரத் தமிழர்களை விடுதலை செய்யவும் தமிழீழ அன்னையின் விலங்கு களை உடைத்தெறியவும் வேலுப்பிள்ளையின் மீது ஆணையிடுவோம்.


– பழ.நெடுமாறன்...


Leave A Comment