பார்வையில்

1958-ல் இனவெறி

1958-ல் இனவெறி ஊட்டப்பட்ட மிருகங்களின் வேட்டையாடலில் 150-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். கொழும்பிலிருந்து 10,000-க்கும் மேற்பட்டோர் அகதிகளாகி வடக்கு, கிழக்கு பகுதிக்கு சென்றார்கள். அப்பொழுதும் தன்னாட்சி கோரிக்கையை வெகு ஜன மக்களிடம் எடுத்துச் செல்ல சமஷ்டிக் கட்சி அறவழியிலேயே போராடியது. 1961லிலும் அதே அறவழிப் போராட்டம் தான் நடத்தியது. அதே ஆண்டு 3 மாத காலம் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தால் வடக்கு, கிழக்கு பகுதியிலுள்ள அரசு நிறுவனங்கள் முடங்கியது. சிங்கள சட்டத்திற்கு புறம்பாக தமிழ் தேசிய அஞ்சல் தலைகள் சமஷ்டிக் கட்சியால் வெளியிட்டது. ஒரு அஞ்சல் தலைக்காக அறவழிப் போராட்ட தலைவர்களை அடித்து ஒடுக்கிட ஆயுதப் படைகளை ஏவியது சிங்களப் பேரினவாத அரசு. எப்பொழுதும் இலக்காகும் அப்பாவி மக்கள் அப்பொழுதும் காவலர்களின் குண்டாந்தடிகளுக்கு இரையானார்கள்.

இப்படியே அறவழிப் போராட்டங்களும் தமிழர் படுகொலைகளும் தொடர்ந்த வண்ணமிருக்க தமிழர்களுக்கான அறவழிக் கட்சிகள் தமிழர்களின் அரசியல் சுதந்திரத்தை, தமிழ் தேசிய அடையாளத்தை காப்பாற்ற இணையத் துவங்கின. அவர்களும் இலட்சியத்தின் பாதைகளை விட்டு பாராளுமன்றப் பதவிக்குள் முடங்கி விட்டனர்.

இதற்கிடையில் இலங்கை அரசின் 1967, 1971, 1979-ம் ஆண்டுகளில் கொண்டு வந்த தரப்படுத்துதல் சட்டங்கள் தமிழர்களின் கல்வியில் பேரிடியாய் நுழைந்தது. அதாவது, அதிக புள்ளிகள் பெற்ற, திறமை வாய்ந்த தமிழ் மாணவர்கள் வாய்ப்புக்களை இழக்க, குறைந்த புள்ளிகள் பெற்ற சிங்கள மாணவர்கள் அந்த வாய்ப்புக்களை பெற்றனர். வேலை வாய்ப்பின்றி, உயர் படிப்புக்கு வழியுமின்றி விரக்தியும், சலிப்பும்  புறவய சூழலாக இளைஞர்களை புரட்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கத் தூண்டியது. அறவழி விரும்பாதவர்கள் தமிழர்கள் எனும் போலி பிம்பம் கட்டமைக்கப்படுவது உண்மையல்ல என்பதற்கும், தமிழினம் சிங்களப் பேரினவாதம் அடிக்க அடிக்க தன் கன்னங்களைக் காட்டிக் கொண்டே தானிருந்தது என்பதற்குமே இந்த அறவழிப் போராட்டங்களின் சான்றுகள்.

Leave A Comment