பார்வையில்

தேசத் தாய் பார்வதி அம்மாவின் நினவுதினம் இன்றாகும் 20.02.2023


” தமிழினத்தின் தேசியத் தலைவரை இந்த உலகிற்கு தந்த ”

வேலுப்பிள்ளை பார்வதி அம்மா.

வல்வையில் குழந்தையாய் 07.08.1931. வானுலகில் அன்னையாய் 20.02.2011




அன்னைபார்வதி…..பார்வதிப்பிள்ளை……பார்வதிஅம்மா……அண்ணரின் அம்மா அல்லது அண்ணையின் அம்மா என ஒன்றிற்கு மேற்பட்ட பெயர்களால் விழிக்கப்படும் வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளை என்னும் எண்பதுவயதான பெண்ணே பார்வதிஅம்மா ஆவார். வேலுப்பிள்ளை யின் மனைவி என்ற அறிமுகம் இவரது அடையாளம் அல்ல. அப்பெயர்; இவரை அறிமுகப்படுத்த போதுமானதாக இல்லை. ஆனால் இவரது பிள்ளைகளில் ஒருவரான ‘பிரபாகரனின் தாயார்’ என்ற அறிமுகமே உலகம் முழுக்க இவரை அடையாளம் காட்டிவிடும் சக்திவாய்ந்தது. ஏனெனில் உலகினை இயக்குவதாக பீற்றிக்கொள்ளும் உலக வல்லரசுகளே இத் தாயின்மைந்தனான ‘பிரபாகரன்’ என்னும் பெயரைக்கேட்டு மிரண்டு கொண்டதுடன் தனித்து நிற்கமுடியாமல் ஒன்றுடன்ஒன்று கூட்டுச்சேர்ந்து கொண்டு தமது குலை நடுக்கத்தை மறைத்துக்கொண்டமை உலகம் கண்டுகொண்ட உண்மையாகும்.


மேற்படி பெருமைபெற்ற மைந்தனைப்பெற்ற பார்வதிஅம்மா வல்வெட்டித்துறை கொத்தியால் ஒழுங்கையில் வாழ்ந்த வல்லிபுரம் சின்னம்மா தம்பதிகளின் புதல்வி யாவார். வல்லிபுரம் பருத்தித்துறை யைச் சேர்ந்த சம்பானோட்டிக்கரையார் எனப் புகழ்பெற்றவரும் ‘மெத்தைவீட்டு’ நாகலிங்கம் என அழைக்கப்பட்ட ‘தெய்வர் நாக லிங்கத்தின்’ மைந்தனாவார். நாகலிங்கம் ஆங்கிலேயஅரசினால் ‘முதலியார்’ பட்டம் பெற்ற பெருமைக்குரிய கப்பல்உரிமையாளர் மட்டுமன்றி பலகப்பல்கள் மற்றும் பெரும்நிலபுலம்களிற்கு சொந்தக்காரரானவர். இவர் தனதுபேத்தியான பார்வதியம்மா பிறப்பதற்கு முன்னரே 26 நவம்பர் 1909ஆம் ஆண்டில் மறைந்து விட்டாh.(Notes On Jaffna(1920) page91) பார்வதியம்மாவின் புகழ்பெற்ற மைந்தனான மேதகு பிரபாகரனின் பிறந்தநாள் 26 நவம்பர் 1956 என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. என்னே அதிசயஒற்றுமை. வரலாறுகள் திரும்பும்போது விருட்சமாகின்றனவா?


வல்லிபுரம் சின்னம்மா தம்பதியினருக்கு பார்வதியம்மாவிற்கு முன் பிறந்த பெண்குழந்தை ஒன்று மலேசியாவில் சிறுவயதில் காலமானது. இதனால் இரண்டாம் முறையாக ‘சின்னம்மா’ கற்பமுற்றதும் சின்னம்மா வின் தாயார் மகளான சின்னம்மாவை வல்வெட்டித்துறைக்கு அழைத்து தன்னுடன் வைத்திருந்து பத்தியம் பார்த்தகாலத்தில் பிறந்தவரே பார்வதிஅம்மா ஆவார். இவரிற்கு ஐந்துவருடங்கள் பின்பாக பிறந்தவரே இவரின்தம்பி வேலுப்பிள்ளை. பார்வதிஅம்மாவின் வீட்டுப்பெயர்’குயில்’ என்பதாகும். இவர் வல்வெட்டித்துறையின் பழம்பெருமைமிக்க திண்ணைப் பள்ளிக்கூடமானதும் பின்னாட்களில் அமெரிக்கன் மிஸன் தமிழ்கலவன் ஆரம்ப பாடசாலை என அழைக்கப்பட்ட அரியகுட்டிப் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியை கற்றுக் கொண்டார். 7 ஆவணி 1931 இல் பிறந்த இவர் தனது பதினாறாவது வயதில் வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையில் வாழ்ந்து வந்த வல்வெட்டித் துறையின் முதன்மைக் குடியானதும் பாரம்பரியபெருமை மிக்கதுமான திருமேனியார்; குடும்ப வழித்தோன்றலும் ‘அக்கிரகாரத்துத்தம்பி’ என அழைக் கப்பட்டவரான திருவேங்கடம் வேலுப்பிள்ளையை தனது வாழ்க்கைத்துணையாகக் கொண்டார்.


இங்கு கூறப்படும் திருவேங்கடம் மற்றும் இவரது தந்தையாரான வல்லிபுரம் என்போர்கள் மலேசியாவில் இருந்து ஊருக்கு திரும்பிவந்து வாழ்ந்து கொண்டிருந்தவர்கள். அத்துடன் ஆரம்பத்தில் கொத்தியால் ஒழுங்கையிலேயே அருகருகான வீடுகளில் வாழ்ந்தவர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது இதனால் உறவு முறையாலும் ஏற்கனவே நன்கு அறிமுகமான இரண்டு குடும்பங்கள் மற்றும் ஊராரின் நல்ஆசியுடனும் இவரது இல்லறவாழ்வு இனிதே ஆரம்பமாயிற்று.

வேலுப்பிள்ளையின் காதல்மனைவியாக வாழ்ந்த இவர் 9.3.1948இல் மனோகரன் என்னும் மகனைப் பெற்றதன் மூலம் இனியதாயாகவும் மாற்றமடைந்தார்;. காலவேட்டத்தில் மனோகரனைத் தொடர்ந்து ஜெகதீஸ்வரி, வினோதினி என்றும் இரண்டுபெண் குழந்தைகளையும் பெற்றெடுத்தார். இந்நிலையில் கணவரான வேலுப் பிள்ளையின் கடமை நிமிர்த்தம் 1953ம் ஆண்டு செப்ரம்பரில் அநுராதபுரத்தில் இவரது குடும்பவாழ்க்கை ஆரம்பமாயிற்று. இலங்கையின் புராதனநகரான அநுராதபுரமே முதலாவது தமிழ்அரசர்களான சேனன் குத்திகன் என்பவர் களினால் ஆளப்பட்ட வரலாற்றுப் பெருமைமிக்கது.


அத்துடன் அரசன் என்பதற்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டிய எல்லாளன் எனப்படும் ஈழாளன்(ஈழத்தை ஆண்டதனால் ஈழாழன் என்ற காரணப்பெயரால் அழைக்கப்பட்ட இவரின் பெயர் காலவோட் டத்தில் எல்லாளன் என மாற்றமடைந்து காணப்படுகின்றது) நாற்பத்துநான்கு ஆண்டுகள் செங்கோலோச்சிய புனித பூமி யாகவும் வரலாற்றில் இப்பிரதேசம் காணப்படுகிறது. இவ்வாறான சிறப்புமிக்க அநுராதபுரத்தில் கிறிஸ்து விற்கு முன் 101 ஆண்டளவில் ஈழாளனின் நினைவாக கட்டப்பட்ட சேதியமான ஈழாளனின் நினைவுத்தூபி அமைந்திருந்த Elala Sona (sona என்பது பாளி மற்றும் சமஸ்கிருத மொழிகளில் ‘அருகாமை’ எனப்பொருள்படும்) என்னும் பகுதியிலேயே வேலுப்பிள்ளைக்குரிய அரசாங்க உத்தியோகஸ்தர் தங்கும் விடுதியும் அமைந்திருந்தது.


மகாவிகாரை என அழைக்கப்படும் ருவான் வெலிசாயா தாது கோபத்திற்கு அண்மையில் A12 வீதி என அழைக்கப்படும் அநுராதபுரம் புத்தளம் வீதி மற்றும் A28 வீதி என அழைக்கப்படும் அநுராதபுரம் குருநாகல் வீதி என்பன ஆரம்பிக்கின்றது. இக் குருநாகல்வீதியில் தெற்குநோக்கிச் செல்லும் போது கால்மைல் தூரத்திற்குள் சிற்றம்பலம் தியேட்டரை அடுத்து காணப்பட்ட இடமே Elala sona எனப்படும் பிரதேசமாகும். இவ்வீதியின் வலதுபுறமாக அமைந்திருந்ததே Elala Tomb என்றழைக்கப்படும் ஈழாளனின் நினைவுத் தூபியாகும். இத்தூபியின் வடக்குப்புறமாக ஆரம்பமாகும் தக்குணதகோபாவீதி என இன்றழைக்கப்படும் வீதி யொன்று A12 வீதியான புத்தளம்வீதியுடன் சென்று இணைகின்றது. இவ்வீதியில் குருநாகல் அனுரதபுரவீதிக்கு அண்மையில் அமைந் திருந்த அரசாங்கஊழியர்;கள் மற்றும் மருத்துவர்களிற்கான விடுதிகளி லொன்றிலேயே வேலுப்பிள்ளை அப்பாவிற்கான விடுதியும் அமைந்திருந்தது. தமிழர்களின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த அப்பிரதேசம் அநுராதபுரத்தின் நகர முதல்வராக இருந்த தமிழரான சிற்றம்பலத்திற்கும் பண்டாரநாயக்கா விற்கும் ஏற்ப்பட்ட மோதலையடுத்து பண்டாரநாயக்காவின் அரசாட்சிக்காலத்தில் புனிதநகராக்கப்பட்டு தமிழ்மக்களின் குடியிருப்புகள் திட்ட மிட்டு அங்கிருந்து அகற்றப்பட்டன. 1958கலவரத்துடன் தமிழர்களினால் முற்று முழுதாக கைவிடப்பட்ட அப்பிரதேசம் இன்று காடுமண்டிய அடையாளம் தெரியாத பூமியாகிவிட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.


மேற்படிவிடுதியில் மூன்றுகுழந்தைகளுடன் இனியவாழ்க்கையைத் தொடங்கிய பார்வதிஅம்மா மிகவும் சந்தோசமாக அக்காலத்தைக் களித்திருந்தார்;. வீட்டு வேலைகளை முடித்து விட்டு காத்திருக்கும் இவரும் வேலைமுடிந்து பிற்பகலில் வீடுதிரும்பும் வேலுப்பிள்ளையும் குடும்பசமோதரராக தமது விடுதியின் முன் அமைந் திருந்த ஈழாளனின் நினைவுத்தூபியுடன் அமைந்திருந்த புல்வெளியில் அமர்ந்து தமது மாலை நேரங்களைக் கழித்திருப்பர். ஐந்துவயதான மனோகரனும் நாலு வயதான ஜெகதீஸ்வரியும் ஓடியாடி விளையாடும் போது கைக்குழந்தையான வினோதினி தாயின்மடியிலும் தந்தையின் மடியிலும் மாறிமாறி தவழ்ந்த வண்ணமிருப்பார்.


ஈழாளனின் நினைவுத்தூபியின் எதிரே அமைந்திருந்த இவர்களின் தங்கும்விடுதி, நினைவுத்தூபியின் அடியில் கழிக்கும் மாலை நேரங்கள். இவை எல்லாம் இருபத்திரண்டு வயதுடைய இளம்தாயான பார்வதி அம்மாவின் பார்வையில் தினம்தினம் தெரிவதும் ஈழாளனின் வீரதீரக்கதைகளைக் கேட்பதுமாக இவரது உள்ளுணர்வுகள் ஈழாளனையே(எல்லாளன்) சுற்றிச்சுழன்று உவகைகொள்ளும் வேளையிலேயே புதியகரு இவரின் வயிற்றில் உருவானது.


1954ம் ஆண்டு ஆரம்பமாதங்களில் உருவாகிய அக்கருவே 2011ம் ஆண்டு ஆரம்பமாதங்களில் இக்கட்டுரையை எழுத எனக்கு ஏதுவானது. அக்கருவே 1954 கார்த்திகை 26ம் திகதி இணுவில் மகப்பேற்று நிலையத்தில் பிரபாகரன் என்னும் தெய்வீகக் குழந்தையாக ஜனனமானது. ஈழாளனின் நினைவில் பிறந்த அக்குழந்தைக்கு என்னபெயர்; வைக்கலாம் எனக்குடும்பத்தினர்; சிந்தித்தபோது தந்தையார்; வேலுப் பிள்ளை சிவனையும் விஸ்ணுவையும் இணைத்து மூத்தமைந்தனின் மனோகரன் என்னும் பெயரின் தொடராக அரிகரன் என பெயரைக்கூறினார்;. குழந்தையின் தாய்மாமன் வேலுப்பிள்iயோ சூரியதேவனின் பெயரான ‘பிரபாகரன்’ எனப் பெயரைச் சூட்டினார்.


பார்வதியம்மாவின் தந்தையாரான வல்லிபுரம் போல் தோற்ற மளித்த அக்குழந்தையினை தாய்வழிப்பேத்தியான சின்னம்மா தனது கணவரின் அழைபெயரான ‘துரை’ என கொஞ்சலாக அழைக்கமுற்பட்டார் அதுவே அக்குழந்தையின் வீட்டுப் பெயராக மாற்றமடைந்தது. மனோகரன், பிரபாகரன் என்னும் இனிய சந்தங்களினால் இணையும் பெயர்கொண்ட குழந்தைகளுடன் முன்கூறிய ஜெகதீஸ்வரி மற்றும் வினேதினி என்னும் பெண்குழந்தைகளுடனும் மேலும் பதினொருமாதங்கள் அநுரதபுரத்தின் ஏலாளசோணாவில் இவர் வாழ்ந்திருந்தார். 1955ஒக்டோபர் மாதம் கணவரான வேலுப்பிள்ளை உத்தியோக இடமாற்றம் காரண மாக புத்தளத்திற்கு மாற்றலாகிச் சென்றார்.


அக்காலத்தில் ஒருவயது பிரபாகரன் மற்றும் மூன்று குழந்தைகளுடனும் தாயார் சின்னம்மா சகோதரன் வேலுப்பிள்ளை என்பவர்களுடன் கூட்டுக்குடும்பமாக வல்வெட்டித்துறை ஆலடியில் பார்வதி அம்மாவின் வாழ்கை இனிதாகத் தொடர்ந்தது. விடுமுறை நாட்களில் வீட்டிற்கு வரும் கணவர் வேலுப்பிள்ளை எப்பொழுதும் குறும்புசெய்யும் குழந்தை பிரபாகரன் மற்றும் குழந்தைகளும் வீட்டு வேலைகளினை முன்னெடுத்துச் செய்யும் அன்னையாரும் என பார்வதிஅம்மாவின் அக்காலம் மிகஇனிமையானது.


1958இல்; வேலுப்பிள்ளை அப்பாவிற்கு மட்டக்களப்பிற்கு மாற்றம் கிடைத்தது. மீண்டும் குடும்பத்துடன் பார்வதியம்மா மட்டக்களப்பில் குடியேறினார். தாமைரைக்கேணி குறுக்குவீதீயில் 7ம் இலக்க வீட்டில் நான்குவயது பிரபாகரனுடன் பார்வதிஅம்மா குடிபுகுந்தார். இக்காலத்தில் தமதுவீட்டின் பின்புறம் குடியிருந்த ஆசிரியையான இராசம்மா என்பவருடன் மிகவும் நட்பாகப்பழக ஆரம்பித்தார்;. வெலிமடை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையின் ஆசிரியையாக பணியாற்றியவர் இராசம்மா என்ற அன்னப்பாக்கியம் ஆவார்.


அதே பாடசாலையில் பணியாற்றியவர்; இவரதுகணவரான அரியக்குட்டி செல்லத்துரை ஆசிரியராவார். இவர் மட்டக்களப்பு ஆரையம்பதி 2ம்குறுக்குவீதியை பிறப்பிடமாகக் கொண்டவர். தாமரைக்கேணியைச் சேர்ந்த நல்லையா முதலியாரின் மகளான இராசம்மா என்ற அன்னம்மாவை மணமுடித்து தாமரைக்கேணியை தமது வாழ்விடமாகக் கொண்டிருந்தார்.

குழந்தையான பிரபாகரன் வளரும் பருவத்திலேயே இராசம்மாவுடனான பார்வதி அம்மாவின் அன்பானநட்பும் வளர்ந்து கொண்டது. இந்நிலையிலேயே 1958ம்ஆண்டு மே 25ந் திகதி மட்டக்களப்பு பதுளைவீதீயில் தொடங்கிய இனக்கலவரம் நாடளாவிய ரீதியில் தமிழினப்படுகொலையாக மாற்ற மடைந்து. இலங்கையின் இனக்குழும வரலாற்றில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்திய இக்கலவரம் நடைபெற்று 57 வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் அதன் பாதிப்புக்கள் இன்றுவரை தொடரவே செய்கின்றன. ‘பண்டாரநாயக்கா அரசாங்கம்’ தமது அதிகாரத்தினால் கட்டுப்படுத்த அல்லது தடுத்து நிறுத்த மறுத்ததனால் பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்திய இக்கலவரத்தின் ஆரம்பம் நிச்சயமாக இனப்பகையல்ல.


1958ம் ஆண்டில் நுவரெலியாவின் முன்னால் மேயரான செனிவிரட்ணா என்பவர்; தமது பதவியை கைவிட்டுவிட்டு மட்டக்களப்பில் தென்னந்தோட்டம் ஒன்றைக் கொள்வனவு செய்து அங்கேயே வாழ்ந்துவந்தார். அக்காலத்தில் அங்கிருந்த உள் ளூர்ப் பெண்ணொருத்தியுடன் இவருக்கு தகாதஒழுக்கம் உருவாயிற்று. இதனால் இவர்;மீது பகமைகொண்ட அப்பெண்னின் கணவர்; 25 மே 1958 இல் செனி விரெட்ணாவை சுட்டுக்கொன்றுவிட்டார்;. 26 மே 1958 இல் இவரது உடலை பதுளை வீதிவழியாக நுவரெலியாவிற்கு எடுத்துச்செல்லும் பாதையிலேயே ‘சிங்களவனை தமிழன் கொன்றுவிட்டான்’ எனப் பரவியசெய்தி தமிழர்களுக்கு எதிரான பாரிய இனப்படுகொலையாக மாற்றமடைந்தது.


இக்காலத்தில் 27 மே 1958 இல் செவ்வாய்க்கிழமை வெலிமடையில் இருந்து பதுளைவழியாக மட்டக்களப்பிற்கு தனது நண்பர்களான வேலுச்சாமி மற்றும் தங்கவேல் என்பவர்களுடன்; திரும்பிக் கொண்டிருந்த செல்லத்துரை ஆசிரியர் ‘மகாஓயா’ என்ற இடத்தில் சிங்கள இனவெறியரால் கொல்லப்பட்டார்;. இதன்பின் எப்படியே மட்டக்களப்புக்கு தப்பிவந்த ஆசிரியையான இராசம்மா மட்டக்களப் பிலேயே தனது ஆசிரியத்தொழிலில் தொடர்ந்துஈடுபட்டார். இதனால் பார்வதிஅம்மா மற்றும் இராசம்மாவின் அந்நியோன்னியம் அதிகமாகியது.


தொடர்சி...


Leave A Comment